Jun
23
அறிமுகம்:
'இருட்டு
என்பது மிகக்குறைந்த அளவு
ஒளி;
ஒளி என்பது
மிகக்குறைந்த அளவு இருட்டு'
என்ற எளியதோர்
மாற்றுச் சிந்தனையோடு
இக்கட்டுரையைத் தொடங்குவோம்.
முதலில்,
மாற்றுச் சிந்தனை
என்றால் என்ன என்பதைச் சற்றே
புரிந்து கொள்ள முற்படுவோம்.
மாற்றுச் சிந்தனை
என்றால் எதற்கு மாற்று என்ற
கேள்வியின் வழியே முன்பே ஒரு
சிந்தனை இருப்பதை நாம் விளங்கிக்
கொள்ளலாம்.
அதை நாம் இங்கே
மரபார்ந்த சிந்தனை எனக்
குறிப்பிடுவோம்.
எந்த
ஒரு சிந்தனையாக இருந்தாலும்,
அது முதலில் ஒரு
தனி மனிதனிடமிருந்தே தொடங்குகிறது.
பின்னர் அதன்
சாதக,
பாதகங்களைப்
பொருத்து அது ஒரு சிறிய
குழுவாலோ,
பெருங்கூட்டத்தாலோ
தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு
அது ஒரு மரபார்ந்த சிந்தனையாகப்
பரிணமிக்கிறது.
இந்தச் சிறிய
குழு அல்லது பெருங்கூட்டம்
என்பதை நாம் ஒரு இனக்குழு,
சாதி அல்லது மதம்
சார்ந்த ஒரு சமூகம் அல்லது
வெவ்வேறு கலாச்சார,
பண்பாட்டுச்
சமூகங்கள் என்ற விரிந்த
தளங்களில் பொருள் கொள்ளலாம்.
இப்படியாக ஒரு
மரபார்ந்த சிந்தனை முறை
வெவ்வேறு (சமூக)மனிதர்களிடம்
வெவ்வேறாகக் கட்டமைக்கப்பட்டுப்
பின்பற்றப்பட்டு வருகிறது.
வரலாற்றின்
வெவ்வேறு காலக்கட்டங்களில்
இந்த மரபார்ந்த சிந்தனை
முறைகளுக்கெதிராகச் சிந்தித்து
புதிய வரலாறு படைத்த மாமனிதர்களை
நாமறிவோம்.
அந்த மாமனிதர்களைக்
குறித்து இக்கட்டுரையில்
நான் ஏதும் சொல்லப் போவதில்லை.
நான் செய்யப்
போவதெல்லாம் நான் அறிந்த சில
மாற்றுச் சிந்தனைகளை உங்களோடு
பகிர்ந்து கொள்வதுதான்.
இன்னும்
சிந்திப்போம்...
Post a Comment